Wednesday, 14 August 2013

இட்லி மிளகாய் தூள்

தேவையான பொருட்கள்:
  1. கடலை பருப்பு - 100 கிராம் 
  2. உளுந்து - 100 கிராம் 
  3. காய்ந்த மிளகாய் - 4
  4. பூண்டு - 5 பற்கள் 
  5. பெருங்காய தூள் - ஒரு சிட்டிகை 
  6. எண்ணெய் - 1 ஸ்பூன் 
  7. உப்பு - தேவையான அளவு 
செய்முறை:
  1. பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், பூண்டு, பெருங்காய தூள், கடலை பருப்பு, உளுந்து ஆகியவற்றை போட்டு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
  2. வறுத்ததை ஆறவைத்து பின் தேவையானாளவு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  3. இட்லி, தோசைக்கு இந்த தூளை தேவையான அளவு எடுத்து எண்ணெயுடன் கலந்து சாப்பிடலாம்.
இட்லி மிளகாய் தூள் தயார் !!!

சாம்பார் மிளகாய் தூள்

தேவையான பொருட்கள்:
  1. கொத்தமல்லி (தனியா) - 1 கிலோ 
  2. நீட்டு மிளகாய் - 1/2 கிலோ 
  3. குண்டு மிளகாய் - 1/2 கிலோ 
  4. மஞ்சள் - 50 கிராம் 
  5. கடுகு - 100 கிராம் 
  6. மிளகு - 100 கிராம் 
  7. சீரகம் -100 கிராம் 
  8. வெந்தயம் - 25 கிராம் 
  9. கடலை பருப்பு - 100 கிராம் 
  10. சோயா பீன்ஸ் - 100 கிராம் 
  11. புழுங்கல் அரிசி - 100 கிராம் 
செய்முறை:
  1. கடலை பருப்பு, கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம், சோயா பீன்ஸ், புழுங்கல் அரிசி ஆகியவற்றை தனி தனியாக எண்ணெய் இல்லாமல் லேசாக வறுத்தெடுக்கவும் 
  2. பின் வறுத்த இவற்றோடு கொத்தமல்லி (தனியா), நீட்டு மிளகாய், குண்டு மிளகாய், மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து மிசினில் அரைத்து கொள்ளவும்.
  3. அரைத்ததும் சூடு ஆறும் வரை பாத்திரத்தை மூடாமல் திறந்து வைக்கவும். ஆறியபின் முடிவைத்துத் தேவையான பொழுது பயன்படுத்தவும்.
சாம்பார் மிளகாய் தூள் தயார் !!!

பின்குறிப்பு:
  • நீட்டு மிளகாய், குண்டு மிளகாய் இரண்டும் கிடைக்காத பட்சத்தில் ஏதேனும் ஒரு வகை மிளகாயை ஒரு கிலோ பயன்படுத்தலாம்.
  • இது அனைத்து விதமான சாம்பார், காரக்குழம்பு, வறுவல், பொறியல், மீன்குழம்பு, கறிக்குழம்பு போன்ற அனைத்து விதமான சமையலுக்கும் உபயோகப்படுத்தலாம்.
  • இந்த மிளகாய் தூளை மூன்று மாதம் வரை வைத்துக்கொள்ளலாம்.

Tuesday, 13 August 2013

சுண்டைக்காய் காரக்குழம்பு

தேவையான பொருட்கள்:
  1. சுண்டைக்காய் - 200 கிராம் 
  2. வெங்காயம் - 200 கிராம் 
  3. தக்காளி - 200 கிராம் 
  4. பூண்டு - 10 பற்கள் 
  5. சாம்பார் மிளகாய்  தூள் - 2 ஸ்பூன் 
  6. புளி - ஒரு சிறு எலுமிச்சை அளவு 
  7. வெல்லம் - ஒரு சிறு நெல்லிக்காய் அளவு 
  8. எண்ணெய் - 100 கிராம்
  9. கடுகு - 1 ஸ்பூன் 
  10. வெந்தயம் - 1 ஸ்பூன் 
  11. கறிவேப்பில்லை - 2 கொத்து 
  12. கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு 
  13. உப்பு - தேவையான அளவு 
  14. தண்ணீர் - ஒரு லிட்டர் 
செய்முறை:
  1. பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்தபின் கடுகு, வெந்தயம், கறிவேப்பில்லை போட்டு பொறிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
  2. தக்காளியை பொடியாக நறுக்கி கையால் மசித்து வெங்காயம் வதங்கியவுடன் போடவும்.
  3. தக்காளி வதங்கிய பின் பூண்டை போடவும்.
  4. இரண்டாக நறுக்கிய சுண்டைக்காயை போட்டு சிறிது நிறம் மாறும் வரை வதக்கவும்.
  5. இப்பொழுது சாம்பார் மிளகாய் தூள் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  6. பிறகு தண்ணிர் ஊற்றி கொத்தமல்லி, வெல்லம், தேவையான உப்பு ஆகியவற்றை போட்டு கலக்கவும்.
  7. மேலே எண்ணெய்  தானாக மிதந்து வரும் அளவுக்கு கொதிக்க விடவும்.
சுண்டைக்காய் குழம்பு தயார்  !!!

பின்குறிப்பு:
  1. சுண்டைக்காயை சமைப்பதற்கு முன் நிறம் மாறாமல் இருப்பதற்கு அதை இரண்டாக நறுக்கி தண்ணிரில் போட்டுவைக்கவும். 
  2. சாம்பார் மிளகாய் தூள்
      • கொத்தமல்லி (தனியா) - 1 கிலோ 
      • நீட்டு மிளகாய் - 1/2 கிலோ 
      • குண்டு மிளகாய் - 1/2 கிலோ 
      • மஞ்சள் - 50 கிராம் 
      • கடுகு - 100 கிராம் 
      • மிளகு - 100 கிராம் 
      • சீரகம் -100 கிராம் 
      • வெந்தயம் - 25 கிராம் 
      • கடலை பருப்பு - 100 கிராம் 
      • சோயா பீன்ஸ் - 100 கிராம் 
      • புழுங்கல் அரிசி - 100 கிராம் 
    • கடலை பருப்பு, கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம், சோயா பீன்ஸ், புழுங்கல் அரிசி ஆகியவற்றை தனி தனியாக எண்ணெய் இல்லாமல் லேசாக வறுத்து பின் கொத்தமல்லி (தனியா), நீட்டு மிளகாய், குண்டு மிளகாய், மஞ்சள் இவற்ற்றோடு சேர்த்து மிசினில் அரைத்து கொள்ளவும்.
    • மிளகாய் தூள் அரைத்ததும் சூடு ஆறும் வரை பாத்திரத்தை மூடாமல் திறந்து வைக்கவும். ஆறியபின் முடிவைத்துத் தேவையான பொழுது பயன்படுத்தவும்.
    • நீட்டு மிளகாய், குண்டு மிளகாய் இரண்டும் கிடைக்காத பட்சத்தில் ஏதேனும் ஒரு வகை மிளகாயை ஒரு கிலோ பயன்படுத்தலாம்.