Saturday, 18 July 2026

பொன்மொழிகள்

                                                              பொன்மொழிகள்

1. சிறுகுழந்தைகளை தட்டி கொடுத்து வளர்ப்பதும் சில சமயம் தட்டி வளர்ப்பதும் பெற்றவர்களின் கடமையாகும்.

2. ஒரு பெண்ணுக்கு கணவன் உயிரோடு இருப்பது முக்கியம். அதே சமயம் அவளின் உணர்வுகளை உயிரோடு வைத்திருப்பவன் தான் முக்கியம்.

3. எத்தனை முறை  தோற்றாலும் தன் கூட்டை கட்டி முடிக்கிறது சிலந்தி.

4. மண்ணுக்குள் பாதுகாப்பான விதையாக இருப்பதைவிட துணிச்சலாக விருட்சமாக வளர்ந்து இருப்பது நல்லது.

5. வாழுகின்ற வாழ்க்கை வேதனையாக இருக்கிறது என்பதற்காக இன்னொன்றை தேடாதே அது இன்னும் வேதனையாக இருக்கும்.

6. தவறு செய்த ஒருவனுக்கு அவருடைய பயமே தன்டனை.

7. வாழ்க்கை என்பது இழந்ததை பொருந்து அல்ல இருப்பதை பொருத்தது.

8. தனியாக இருக்கும்போது  சிந்தனையிலும்   கூட்டத்தோடு இருக்கும்போது  வார்த்தையிலும்  கவனமாக இருக்க வேண்டும்.

9. காட்டில் வாழும் மரங்களை யாரும் தண்ணீர் ஊற்றி வளர்ப்பதில்லை, தானாக வளர்ந்து பூத்து, காய்த்து வளர்வது போல் கற்றவர்கள் இயற்கையாகவே வளர்வார்கள்.

10. மட்டம் தட்டப்பட்ட மனமும் மட்டம் தட்டப்பட்ட தரையும் உறுதியாக இருக்கும்.


Tuesday, 26 May 2026

பொன்மொழிகள்

                                                                பொன்மொழிகள்

1. ராஜகுணத்தில் முதல் தகுதி பணிவு அது அடிமைத்தனம் இல்லை.

2. எப்போதும் தோற்க்க நினைப்பவர்கள் யாராலும் ஜெயிக்க முடியாது.

3. மன்னிக்கவே முடியவில்லை என்றால் விலகிச்செல்லுங்கள்.

4. அவமானங்கள் இல்லமல் வெகுமானங்கள் இல்லை.

5. மற்றவர்களுக்கு நீங்கள் எதை செய்கிறீர்களோ அது உங்களுக்கு திரும்பி வரும்.

6. பட்டுப்போன மரத்திற்கு பறவைகளும் வருவதில்லை பணம் இல்லாதவர்கள் வீட்டிற்க்கு  உறவுகளும் வருவதில்லை.

7. நேரம் சரியில்லை என்றால் புழுகூட பாம்பு மாதிரிதான் தெரியும்.

8. மனமே அமைதியாக இரு மாற்றத்தையும் ஏற்றுக்கொள் ஏனெனில் சில தீர்ப்புகளை மாற்ற முடியாது. அதனால் எதுவும் நிலையானது இல்லை.

9. எந்த ஒரு செயலையும் முழுமையாக புரிந்து செய்தால் வெற்றி நிச்சயம்.

10. பழி சொல்ல ஊரே வரும், வழி சொல்ல ஒருவரும் வரமாட்டார்கள் உனக்கு நீயே வழி.

Sunday, 3 May 2026

பொன்மொழிகள்

                                                                   பொன்மொழிகள் 

1. ஒருத்தரை பார்த்து கத்துக்கொள்ளுங்கள், கரைந்து போகாதீர்கள்.

2. எதிரிகளை உருவாக்குவதை விட எதிர்காலத்தை உருவாக்கலாம்.

3. கண்ணாடியை போய் நீதான் பார்க்கணும், கண்ணாடி உன்னை வந்து பார்க்காது.

4. வெளிச்சம் இருந்தால்தான் நிழல் தெரியும், வெளிச்சம் இல்லாவிட்டால் நிழல் தெரியாது.

5. வன்முறை என்பது கோழைகளின் ஆயுதம்.

6. அம்மா நடக்க கற்றுக்கொடுத்தால், அப்பா நடத்தையை கற்றுக்கொடுத்தார்.

7. மொழியை இழந்தவன் தன் முகத்தை இழக்கிறான்.

8. நிழலுக்கு யாராலும் மாலை போட முடியாது.

9. வாழ்க்கையில் அமைதியாய் இருக்கிறதுக்கு பயம் இல்லை பொருப்பு இருப்பதால்.

10. தொடர்ந்து படிப்பவர்கள் யார் என்ன சொன்னாலும்  மகிழ்ச்சியையும் துன்பத்தையும் சமமாக எடுத்துக்கொள்வார்கள்.