பொன்மொழிகள்
1. சிறுகுழந்தைகளை தட்டி கொடுத்து வளர்ப்பதும் சில சமயம் தட்டி வளர்ப்பதும் பெற்றவர்களின் கடமையாகும்.
2. ஒரு பெண்ணுக்கு கணவன் உயிரோடு இருப்பது முக்கியம். அதே சமயம் அவளின் உணர்வுகளை உயிரோடு வைத்திருப்பவன் தான் முக்கியம்.
3. எத்தனை முறை தோற்றாலும் தன் கூட்டை கட்டி முடிக்கிறது சிலந்தி.
4. மண்ணுக்குள் பாதுகாப்பான விதையாக இருப்பதைவிட துணிச்சலாக விருட்சமாக வளர்ந்து இருப்பது நல்லது.
5. வாழுகின்ற வாழ்க்கை வேதனையாக இருக்கிறது என்பதற்காக இன்னொன்றை தேடாதே அது இன்னும் வேதனையாக இருக்கும்.
6. தவறு செய்த ஒருவனுக்கு அவருடைய பயமே தன்டனை.
7. வாழ்க்கை என்பது இழந்ததை பொருந்து அல்ல இருப்பதை பொருத்தது.
8. தனியாக இருக்கும்போது சிந்தனையிலும் கூட்டத்தோடு இருக்கும்போது வார்த்தையிலும் கவனமாக இருக்க வேண்டும்.
9. காட்டில் வாழும் மரங்களை யாரும் தண்ணீர் ஊற்றி வளர்ப்பதில்லை, தானாக வளர்ந்து பூத்து, காய்த்து வளர்வது போல் கற்றவர்கள் இயற்கையாகவே வளர்வார்கள்.
10. மட்டம் தட்டப்பட்ட மனமும் மட்டம் தட்டப்பட்ட தரையும் உறுதியாக இருக்கும்.