Sunday, 8 September 2013

பால் பாயாசம்

தேவையான பொருட்கள்:
  1. பால் - 1 லிட்டர் 
  2. தண்ணீர் - 1/2 லிட்டர் 
  3. சேமியா - 50 கிராம் 
  4. ஜவ்வரிசி - 50 கிராம் 
  5. சர்க்கரை - 1/4 கிலோ 
  6. ஏலக்காய் - 4
  7. நெய் - 25 கிராம் 
  8. முந்திரி, திராட்ச்சை - தேவையான அளவு

செய்முறை:
  1. ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் பால், 1/2 லிட்டர் தண்ணீர் கலந்து கொதிக்க விடவும்.
  2. கொதித்தவுடன் ஜவ்வரிசி போட்டு வேகவிடவும்.
  3. வெந்தவுடன் சேமியாவை போட்டு ஒரு கொத்தி வந்ததும் ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும்.
  4. பின் சர்க்கரை சேர்த்து கரைந்ததும் இறக்கிவிடவும்.
  5. ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி முந்திரி, திராட்ச்சை போட்டு பொன் நிறமானவுடன் பாயாசத்தில் ஊற்றி கலந்து பரிமாறவும்.

பால் பாயாசம் தயார் !!!

Saturday, 7 September 2013

சர்க்கரை பொங்கல்

தேவையான பொருட்கள்:
  1. பச்சை அரிசி - 1 கப் 
  2. பச்சை பருப்பு - 1/2 கப் 
  3. பாகு வெல்லம் - 1/4 கிலோ 
  4. நெய் - 50 கிராம் 
  5. முந்திரி, திராட்ச்சை, பாதாம் - தேவையான அளவு 
  6. ஏலக்காய் - 4
  7. கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை 
  8. தண்ணீர் - 5 கப் 

செய்முறை:
  1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அரிசி, பருப்பு சேர்த்து நன்றாக  வேகவிடவும்.
  2. வெந்தவுடன் அனலை சிறிதாக்கி வெல்லத்தை தூள் செய்து போட்டு கரையும்வரை நன்றாகக் கிளறவும்.
  3. பின் கேசரி பவுடர், ஏலக்காய் தூள் போட்டு கலந்துவிடவும்.
  4. இப்பொழுது ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி முந்திரி, திராட்ச்சை போட்டு பொன் நிறம் ஆனதும் பொங்கலில் ஊற்றவும்.
  5. நன்றாகக் கலந்து பரிமாறவும்.
சர்க்கரை பொங்கல் தயார் !!! 

பின் குறிப்பு :
  • வெல்லத்தில் மண் தூசி இருந்தால் வெல்லபாகு செய்து உபயோகப்படுத்தலாம்.
  • வெல்லபாகு செய்முறை
    1. பாத்திரத்தில் ஒரு கரண்டி தண்ணீர் ஊற்றி போடி செய்த வெல்லத்தை போட்டு நன்றாகக் கரையும்வரை கொதிக்கவிடவும்.
    2.  பிறகு இதனை ஒரு வெள்ளை துணியால் வடிகட்டினால் வெல்லப்பாகு தயார்.

Monday, 26 August 2013

பாரம்பரிய எள்ளு உருண்டை

தேவையான பொருட்கள்:
  1. எள்ளு - 1 கப் 
  2. வேர்கடலை - 1 கப் 
  3. கேழ்வரகுமாவு - 1 கப் 
  4. வெல்லம் - 1 கப் 
செய்முறை: 
  1. முதலில் எள்ளை வறுத்து போடி செய்து கொள்ளவும்.
  2. பின் வேர்கடலையை வறுத்துத் தோலை நீக்கி சின்ன சின்னதாக பொடித்துக் கொள்ளவும்.
  3. கேழ்வரகு மாவை தண்ணீர் உப்பு போட்டு பிசைந்து உருண்டை செய்து தட்டி தோசை கல்லில் அடை செய்து, பின் அதை துண்டு துண்டாக புட்டு வைத்துக் கொள்ளவும்.
  4. வெல்லத்தை போடி செய்துக் கொள்ளவும்.
  5. மிக்சியில் எள்ளு, வேர்கடலை, கேழ்வரகு அடை ஆகியவற்றை தனித்தனியாக பொடித்துக் கொள்ளவும்.
  6. பிறகு மிக்சியில் அரைத்து வைத்த எள்ளு, வேர்கடலை, கேழ்வரகு அடை ஆகியவற்றோடு வெல்லத்தையும் போட்டு மீண்டும் மிக்சியில் லேசாக விட்டுவிட்டு அரைத்தால் எல்லாம் ஒன்றாகக் கலந்து விடும்.
  7. இதனை எடுத்து ஒன்றாகக் கிளறி லட்டு போல் பிடித்து வைத்துக் கொள்ளவும்.
 எள்ளு உருண்டை தயார் !!!