Friday, 17 June 2022

வாய் வரட்சி போக்கும் கொள்ளு

                              வாய் வரட்சி போக்கும் கொள்ளு 

கொள்ளு 1/4 கிலோ கருவி தண்ணீர் வடிகட்டி ஈரத்தோடு கடாயில் போட்டு நன்றாக வருத்து எடுத்து ஆறவைத்து டப்பாவில் போட்டுவைத்துக்கொள்ளவும். இதை இரவு உணவுக்கு பின்பு 1/2 ஸ்பூன் அளவு மென்று சாப்பிடவும். சாப்பிட்டப்பின் வாயில் எச்சில் வரும். வாய்வரட்சி நீங்கி நன்றாக தூக்கம் வரும். நாம் வெய்யிலில் போகும்போது கொள்ளு எடுத்து வைத்துக்கொண்டால் தண்ணீர் இல்லாதபொருது 1/2 ஸ்பூன் வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் வாயில் எச்சில் ஊறும்.


குறிப்பு:

1.  கற்பமானவர்கள் கொள்ளு சாப்பிடக்கூடாது.

2. கொள்ளு வறுக்காமல் சாப்பிட கூடாது.

Friday, 21 January 2022

                        தோல் கலர்  கொடுத்து தோல்  நோய் குணமாகும் 

கஸ்தூரி மஞ்சள் தூள் - 100
வேப்பிலை தூள் - 100

 இரண்டும் சம அளவு கலந்து உடம்பில் பூசி குளித்தால் உடல் கலர் கொடுக்கும் தோல் நோய் குணம் ஆகும் தோல் பாதுகாப்பாக இருக்கும்.


                                முகத்தில் உள்ள மங்கு குணம் ஆகும் 

1.முட்டை தோலை  கழுவி  காயவைத்து மிக்சியில் அரைத்து தூள் செய்து முகத்தில் பூசி குளித்து வர முகம் கலர்கொடுக்கும்.

                                                        முகப்பரு குணம் 
வேப்பிலை, சந்தனத்தை சம அளவு கலந்து உடலில் பூசி குளித்து வர உடல் கலர் கொடுக்கும் தோல் நோய் குணம் ஆகும் தோளுக்கு பாதுகாப்பு கொடுக்கும்.

Friday, 15 May 2020

பொன்மொழிகள்-34

1.           யோசிப்பதனால் நிதானமாக யோசிக்க வேண்டும்.

2.            செயல்புடுவதனால் உறுதியோடு செயல்படவேண்டும்.
 
3.            விட்டுக்கொடுப்பதனால் பெருந்தன்மையோடு விட்டுக்கொடுக்க
                வேண்டும்.

4.             வாழ்க்கை என்பது சங்கீதம் - படுக்க.

5.             வாழ்க்கை என்பது பயணம் - நிறைவு செய்க.

6              வாழ்க்கை என்பது புதிர் - விடை காண்க.

7.             வழக்கை என்பது வாய்ப்பு - பயன்படுத்துக.

8.             வாழ்க்கை என்பது கனவு - நனவாக்குக.

9.             சூழ்நிலைக்கு ஏற்றவாறு அறிவாளி மனதை மாற்றிக்கொள்வான்.   
                அறிவில்லாதவன் ஒருபோதும் மனதை மாற்றிக்கொள்ளமாட்டான்

10.           வெறும் வாய்ச்சொள்ளைவிட செயலோடு சேர்ந்த குரலே உரக்க
                கேட்கப்படும்,