Thursday, 27 June 2013

பொது அறிவு

பண்டைய தமிழர்கள் நில வளத்தையும் இயற்கை சூழலுக்கு ஏற்றவாறு பிரித்திருந்தனர்
  • குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த நிலமும்
  • முல்லை - காடும் காடு சார்ந்த நிலமும்
  • மருதம் - வயலும் வயல் சார்ந்த நிலமும்
  • நெய்தல் - கடலும் கடல் சார்ந்த நிலமும்
  • பாலை - முல்லையும் குறிஞ்சியும் திரிந்து வெம்மை உற்ற நிலம் 
----------------------------------------------------------------------------------------------------------------

தமிழ் நாட்டின் பீட  பூமிகள்
  • தருமபுரி பீடபூமி - பாலாறுக்கும் காவிரிக்கும் இடைப்பட்ட பகுதி 
  • மதுரை பீடபூமி - மதுரைக்கும் கன்னியாகுமரிக்கும் இடைப்பட்ட பகுதி 
  • கோயம்புத்தூர் பீடபூமி - நீலகிரிக்கும் தர்மபுரிக்கும் இடைப்பட்ட பகுதி

Wednesday, 26 June 2013

பக்தி

ஓம்
விநாயகர்
மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே

குரு
குருர் பிரம்மா குருர் விஷ்ணு
குருதேவோ மஹேஸ்வர
குருசாக்ஷாத் பரப்ரஹ்மா
தஸ்மை ஸ்ரீ குருவே நம

சிவன்
உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு லாவிய நிர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்  தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்

சக்தி:
சித்தியே இது உன் சக்தியெயாம்
அத்துடனின் ஆதியின் ஜோதியாகு
வித்தான நின்சக்தி சித்திக்கடும்
சக்தி பெற செய்தனை சித்திதா

லட்சுமி:
செல்வி சிறந்தோய் உன் சிறப்பு
பல்வடிவாயுலகிலாகட்டும்
கல் பிழக்கு மொழியுள் மொழி
துள்ளி வந்து தூய்மையாக்குக

சரஸ்வதி:
கலைகரசியே கவிதா மணி
விலையிலா நின்கருணை வேண்டும்
தலை நீ எனக்கு நிலை நீ எனக்கு
அலையாய் வந்து முத்தினைத்தருவாய்

அம்மன்
தனம் தரும் கல்விதரும் ஒரு நாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவம் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே

சரஸ்வதி
ஓம் சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர் பவதுமேஸத

முருகன்
ஏறுமயில் ஏறிவிளையா ஆடுமுகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசும்முகம் ஒன்றே
கூரும் அடியார்கள் வினைதீர்க்கும் முகம் ஒன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம்புணர வந்த வந்த முகம் ஒன்றே
ஆறுமுகம் ஆனபொருள் நீயருளல் வேண்டும்

திருவிளக்கு
தீபஜோதி யானவளே நமஸ்காரம்
திருவாகி வந்தவளே நமஸ்காரம்
ஆபத் பாந்தவியே நமஸ்காரம்
அனுதினமும் காத்திடுவாய் நமஸ்காரம்

நவக்கிரகங்கள்
சூரியன், சோமன், செவ்வாய்
சொற்புதன், வியாழன், வெள்ளி
காரியும் இராகு, கேது
கடவுளர் ஒன்பதாமர்
தாரியல் சக்கரத்தைத்
தயவுடன் பூசித்தாலும்
பாரினில் செல்வம் உண்டாம்
பாக்கியம் சேறும் நாளும்

நவக்கிரகதலங்கள் 
செங்கதிரோன் சூரியனார் கோயில் குடிகொண்டார்
திருவேங்கடவன் திருப்பதியில் திங்களென நின்றார்
அங்காரகன் ஆவினன்குடி தண்டபானி ஆனார்
அரிய புதன் சொக்க்ரென ஆலவாயமர்ந்தார்
தங்க குரு திருசெந்தூரில் சுப்பிரமணியம் ஆனார்
பொங்குசனி திருநள்ளாற்றில் திருக்கோயில் ஆனார்
பெரிய ராகு, கேது இவர்கள் காளத்தீசர் ஆனார்கள்

குபேரன் 
ஓம் யஷாய குபேராய வைஸ்ரவணாய
தநதாந்யாதிபதயே தநதாந்ய ஸம்ருத்திம் மே
தேஹி தாபய ஸ்வாஹா


ஸ்ரீ ராமர்
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம ராம வராநநே

ஸ்ரீ ஆஞ்சநேயர்
அஸாத்ய ஸாதக ஸ்வாமின்
அஸாத்யம்  தவம் கிம்வத
ராமதூதக்ரூபா ஸிந்தேர் மத்காரியம்
ஸாதய ப்ரபோ

ஸ்ரீ நரஸிம்ஹர்
ஸ்ரீ நரஸிம் ஹோ மகாஸிம் ஹோ திவ்யஸிம் ஹோ மகாபல
உக்ரஸிம்  ஹோ மஹாதேவ உபேந்தரஸ்  சாக்நி லோசந

ஸ்ரீ கருடர்
குங்குமாங்கித  வர்ணாய குங்தேந்து தவளாயச
விஷ்னுவாஹன நமஸ்துப்யம் பஷிராஜாயதே நம

ஸ்ரீ வராஹர்
சுத்தஸ் படிக ஸங்காசம் ரக்தபத்ம தனேஷணம்
வராஹ வதனம் சௌம்யம் சதுர்பாஹீம் கிரீடினம்

ஸ்ரீ ஹயக்ரீவர்
ஜ்ஞாநாநந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ரூதீம்
ஆதாரம் ஸர்வவித்யாநாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே

வரலட்சுமி
ஓம் ஹீரீம் ஸ்ரீம் ஷ்ரீம் வர வராத மகா
ஸாம்ராஜ்ய ராணி வரலட்சிமி வசமாயை ஸ்வாஹ

வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

ராகவேந்திரர் கவசம்
பூஜ்யாய ராகவேந்திராய ஸத்யதர்ம ரதாயச
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே

சாய் பாபா
குருவாய் உந்தனைத் தொழுதேன் சாயிநாதா
உன்னருளை எனக்கு தருவாய் சாயிநாதா
என்வாழ்விற்கு வழிகாட்டுவாய் சாயிநாதா
இன்பம் துன்பம் நிறைந்த வாழ்வின் ஒளியாவாய் சாயிநாதா
உலகப்பற்றை விட்டோழிக்க் அருள்வாய் சாயிநாதா
குருவாயூரப்பனை உன்னிடத்தில் கொண்டுள்ள சாயிநாதா
கோமதி அம்மனின் அருமை மகனே சாயிநாதா
உந்தன் பாதகமலம் சரண் அடைந்தோம் சாயிநாதா
எனக்கு விஜயம் அருள்வாய் சாயிநாதா

புத்தர்
புத்தம் சரணம் கச்சாமி
தர்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி

குருபகவான் கவசம்
வானவர்க்கு அரசனான
வளம் தரும் குருவே உன்னை
தேனான சொல்லெடுத்து
செவிகுளிரப் போற்றுகிறேன்
காணாத இன்பம் யாவும்
காணநீ வழி வகுப்பாய்
மீனமும் தனுசும் உந்தன்
மேலான வீட தாகும்

பொன்னிற முல்லையோடு
புஷ்பராகத்தை ஏற்றாய்
வண்ணத்தில் மஞ்சள் கொண்டாய்
மரத்தினில் அரசை ஏற்றாய்
எண்ணத்தில் நிற்கும் தேவா
எளிதில் வெற்றி தாராய்
மண்ணினில் பதினாறாண்டை
மறவாமல் நீயும் ஏற்றாய்

சுண்டல் நை வேத்யத்தால்
தொல்லைகள் தீர்ப்பவன் நீ
கொண்டதோர் யானை உந்தன்
கொண்டாடும் வாகனம் தான்
வந்திடும் பதவி வாய்ப்பும்
தடையில்லாக் காரிய சிறப்பும்
வந்திடும் பிள்ளை பேறும்
வழங்குதல் உன் பொறுப்பே

பொருளோடு புகழைத் தந்து
போற்றிடும் வாழ்வைத் தந்து
வருங்காலம் அனைத்தும் செல்வம்
வரும்காலம் ஆக்கி வைத்து
பெருமைகள் வழங்க வேண்டும்
பேரருள் காட்ட வேண்டும்
அருள் மிகு குருவே உன்னை
அடிபணிந்து வணங்குகின்றேன்

வருடம் ஓர் ராசிவீதம்
வட்டமாய் சுழன்று வந்தே
தருகிற பலனை நாங்கள்
தங்கமாய் ஏற்றுக்கொள்வோம்
வருகிற நாட்கள் எல்லாம்
வசந்தமாய் மாறுதற்கே
அருள் தரும் உனது பார்வை
அனுதினம் எமக்கு வேண்டும்

குருவே நீபார்த்தால் போதும்
கோடியாய் நன்மை சேரும்
திருவருள் இணைந்தால் வாழ்வில்
திருமணம் வந்து காட்டும்
பொருள் வளம் பெருகும் நாளும்
பொன்னான வாழ்வும் சேரும்
அருள்தர வேண்டி உன்னை
அன்போடு துதிக்கின்றோம

பொன்மொழிகள் - 20

  1. ஒவ்வொருவரும் தன் வயதிற்கேற்ப பலவிதமான புத்தகங்களை படிக்க வேண்டும். வாழ்க்கையில் புத்தகங்களை படிப்பதால் நாமே பல சமயம் பக்குவமாக முடிவுகளை எடுக்க உதவும்.
  2. மனிதவாழ்க்கையில் ஒவ்வொருவரும் திருமந்திரம் படித்தால் உறவுகளிடையே குழப்பம் இல்லாமல் பல விசயங்களை புரிந்துகொள்ளலாம்.
  3. என்னால் முடியாது என்ற எண்ணம் தான் நம் முதல் எதிரி.
  4. வாழ்க்கையில் நடைமுறையில் சில நல்ல மாறுதல்களை மாறுவதற்கு மறுப்பவர்கள் துன்பப்படுகிறார்கள்.
  5. முன்னேற்றம் என்பது முன்னோக்கிப் போய் கொண்டே இருப்பது. அது தேங்கிக் கிடப்பதில்லை, பூர்த்தி அடைவதில்லை, அதற்கு எல்லையும் கிடையாது. ஒதுங்கி நிற்பவர்கள் ஒதுக்கப்படுவார்கள்.
  6. தோல்வி என்பது ஒத்திப் போட்டுள்ள வெற்றி, வீழ்வதில் தவறில்லை. எழுந்திரிக்கும் எண்ணம் இல்லாமல் விழந்தே கிடப்பது தவறு.
  7. ஒருவன் பெற்றுள்ள உடற்பன்புகள், மனப்ன்புகள், சமுக அறநெறிகள், மனப்பான்மைகள் போன்ற எல்லா பான்புகலும் இணைந்த முழுமையான கலவை ஆளுமை எனப்பட்டும்.
  8. நாம் பேசுவதை விட நம் உடல் அதிகம் பேசுகிறது. உடல் எப்போதும் உண்மையையே பேசுகிறது என்பது தான் நிஜம்.
  9. நம்முடைய உணர்ச்சிகளை நம்முடைய உடல் மொழி மூலம் அடுத்தவர்கள் அதிகமாகப் புரிந்து கொள்ள இடம் தராமல் இருக்க வேண்டும்.
  10. நாம் அடுத்தவர்கள் உடல் மொழியை முடிந்தவரை புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொண்டால் நம் வெற்றி தோல்வியை நாமே எளிதாக தெரிந்து கொள்ளலாம்.