Sunday, 25 May 2014

உணவே மருந்து - 6

  1. குளிர்ச்சியான காய்களுடன் (முள்ளங்கி) சமஅளவு முருங்கைக்காய் சேர்த்து சமைத்தால் சளி பிடிக்காது.

அரைக்கீரை கடைசல்


தேவையான பொருட்கள்:
  1. அரைக்கீரை - 1 கட்டு 
  2. தக்காளி - 1
  3. வெங்காயம் - 1
  4. பூண்டு - 14 பல் 
  5. பச்சை மிளகாய் - 2
  6. காய்ந்த மிளகாய் - 2
  7. கடுகு - 1 ஸ்பூன் 
  8. எண்ணெய் - 1 குழி கரண்டி 
  9. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 
  10. பெருங்காயம் - 1 சிட்டிகை 
  11. புளி - ஒரு சிறு நெல்லிக்காய் அளவு 
  12. தண்ணீர் - 1/2 லிட்டர்  
  13. உப்பு - தேவையான அளவு
 அரைக்கீரை கடைசல் செய்முறை:
  1. அரைக்கீரையின் வேரை நீக்கி, நன்றாகக் கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும் (கத்திரிக்கோலால்-scissors நறுக்கிக் கொள்ளவும்).
  2. நறுக்கிய அரைக்கீரை, தக்காளி, நறுக்கிய வெங்காயம், 10 பல் பூண்டு (தோல் உரித்தது), பச்சை மிளகாய், மஞ்சள் தூள், பெருங்காயம், தண்ணீர் ஆகியவற்றை ஒரு சட்டியில் போட்டு நன்றாக வேகவைக்கவும்.
  3. வெந்தபின் புளியை போட்டு மேலும் 5 நிமிடம் வேகவைக்கவும்.
  4. வெந்த கீரையை மத்தால் மையக் கடையவும்.
  5. பிறகு, ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், 4 பல் பூண்டு (தோலோடு நசுக்கியது) ஆகியவற்றை போட்டு தாலித்து கடைந்த கீரையில் கலந்து விடவும்.
அரைக்கீரை கடைசல் தயார்  !!!

Thursday, 22 May 2014

சாம்பார்

தேவையான பொருட்கள்:
  1. பச்சை பருப்பு (அ) துவரம் பருப்பு - 100 கிராம்
  2. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 
  3. பெருங்காயம் - 1 சிட்டிகை 
  4. வெந்தயம் - 1 ஸ்பூன்
  5. பூண்டு - 4 பல் 
  6. நல்லெண்ணெய் - 1 ஸ்பூன் 
  7. தண்ணீர் - 1/2 லிட்டர் 
மேலே கூரிய பொருட்களை ஒன்றாக சேர்த்து நன்றாக வேகவைத்துக் கொள்ளவும்.
  1. எண்ணெய் 
  2. கடுகு - 1 ஸ்பூன் 
  3. கருவேப்பிலை - 2 கொத்து 
  4. சின்ன வெங்காயம் - 1 கைபிடி 
  5. தக்காளி - 4
  6. முருங்கைக்காய் - 2
  7. முள்ளங்கி - 2
  8. பீன்ஸ் - 1 கைப்பிடி 
  9. காரட் - 2
  10. கத்திரிக்காய் - 4
  11. சாம்பார் மிளகாய் தூள் - 2 ஸ்பூன் 
  12. புளி - ஒரு சிறு நெல்லிக்காய் அளவு 
  13. கொத்தமல்லி தழை - சிறிது
  14. உப்பு - தேவையான அளவு 
  15. நெய் - 1 ஸ்பூன்
 செய்முறை:
  1. பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்தபின் கடுகு, கறிவேப்பில்லை போட்டு பொறிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போடவும்.
  2. உடனே மிக்ஸியில் அரைத்த தக்காளியை இதில் போட்டு வதக்கவும்.
  3. பிறகு நறுக்கிய காய்களை இதில் போட்டு வதக்கவும்.
  4. இது வதங்கியதும், 2 ஸ்பூன் சாம்பார் மிளகாய் தூள் போட்டு 1 நிமிடம் வதக்கவும்.
  5. இப்பொழுது வேகவைத்த பருப்பு கலவையை இதில் சேர்க்கவும்.
  6. இதில் 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி, பின் புளி, தேவையான உப்பு, கொத்தமல்லி தழை போட்டு ஒன்றாகக் கலந்து காய்கள் வேகும் வரை கொதிக்க விடவும்.
  7. சாம்பார் தயாரானதும் நெய் விட்டுக் கலந்து இரக்கவும்.
சாம்பார் தயார்  !!!