தேவையான பொருட்கள்:
- பச்சை பருப்பு (அ) துவரம் பருப்பு - 100 கிராம்
- மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
- பெருங்காயம் - 1 சிட்டிகை
- வெந்தயம் - 1 ஸ்பூன்
- பூண்டு - 4 பல்
- நல்லெண்ணெய் - 1 ஸ்பூன்
- தண்ணீர் - 1/2 லிட்டர்
- எண்ணெய்
- கடுகு - 1 ஸ்பூன்
- கருவேப்பிலை - 2 கொத்து
- சின்ன வெங்காயம் - 1 கைபிடி
- தக்காளி - 4
- முருங்கைக்காய் - 2
- முள்ளங்கி - 2
- பீன்ஸ் - 1 கைப்பிடி
- காரட் - 2
- கத்திரிக்காய் - 4
- சாம்பார் மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
- புளி - ஒரு சிறு நெல்லிக்காய் அளவு
- கொத்தமல்லி தழை - சிறிது
- உப்பு - தேவையான அளவு
- நெய் - 1 ஸ்பூன்
- பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்தபின் கடுகு, கறிவேப்பில்லை போட்டு பொறிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போடவும்.
- உடனே மிக்ஸியில் அரைத்த தக்காளியை இதில் போட்டு வதக்கவும்.
- பிறகு நறுக்கிய காய்களை இதில் போட்டு வதக்கவும்.
- இது வதங்கியதும், 2 ஸ்பூன் சாம்பார் மிளகாய் தூள் போட்டு 1 நிமிடம் வதக்கவும்.
- இப்பொழுது வேகவைத்த பருப்பு கலவையை இதில் சேர்க்கவும்.
- இதில் 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி, பின் புளி, தேவையான உப்பு, கொத்தமல்லி தழை போட்டு ஒன்றாகக் கலந்து காய்கள் வேகும் வரை கொதிக்க விடவும்.
- சாம்பார் தயாரானதும் நெய் விட்டுக் கலந்து இரக்கவும்.
சாம்பார் தயார் !!!
No comments:
Post a Comment