Sunday, 25 August 2013

விநாயகர் சதுர்த்தி வெல்லம் பிடிக் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:
  1. பச்சை அரிசி மாவு - 1 கப் 
  2. தேங்காய் - 1 கப்
  3. வெல்லம் - 1/2 கப் 
  4. சர்க்கரை - 1/2 கப் 
  5. ஏலக்காய் - 4
  6. தண்ணீர் - 1 கப்
  7. பால் - 1 கரண்டி
கொழுக்கட்டை செய்முறை:
  1. அடுப்பில் பாத்திரத்தை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி, வெல்லம், சர்க்கரை, தேங்காய், ஏலக்காய் போட்டு கொதிக்க வைக்கவும்.
  2. இது ஆறியபின் இதில் பால், அரிசி மாவு ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து பிசைந்துக் கொள்ளவும்.
  3. இவற்றை ஒரு கைப்பிடி அளுவுக்கு நன்றாக பிடித்து வைத்துக்கொள்ளவும்.
  4. இவற்றை ஒரு  இட்லி பாத்திரத்தில் ஐந்து நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.
கொழுக்கட்டை தயார் !!!

பின்குறிப்பு:
  1. பச்சை அரிசியை ஒரு மணிநேரம் ஊர வைத்து பின் தண்ணிரை வடித்து ஒரு வெள்ளை துணியில் பரப்பி நிழலில் காய வைத்து அரைத்துக்கொள்ளவும்.
  2. கொழுக்கட்டையை  பிடிப்பதற்கு தண்ணிர் பற்றவில்லை என்றால் காச்சிய பாலை ஊற்றி கலந்து பிசைந்துக்கொள்ளவும்.
  3. தண்ணிர் அதிகமாகி விட்டால் அரிசி மாவு தேவையான அளவு போட்டு பிசைந்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment