தேவையான பொருட்கள்:
- அரைக்கீரை - 1 கட்டு
- தக்காளி - 1
- வெங்காயம் - 1
- பூண்டு - 14 பல்
- பச்சை மிளகாய் - 2
- காய்ந்த மிளகாய் - 2
- கடுகு - 1 ஸ்பூன்
- எண்ணெய் - 1 குழி கரண்டி
- மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
- பெருங்காயம் - 1 சிட்டிகை
- புளி - ஒரு சிறு நெல்லிக்காய் அளவு
- தண்ணீர் - 1/2 லிட்டர்
- உப்பு - தேவையான அளவு
- அரைக்கீரையின் வேரை நீக்கி, நன்றாகக் கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும் (கத்திரிக்கோலால்-scissors நறுக்கிக் கொள்ளவும்).
- நறுக்கிய அரைக்கீரை, தக்காளி, நறுக்கிய வெங்காயம், 10 பல் பூண்டு (தோல் உரித்தது), பச்சை மிளகாய், மஞ்சள் தூள், பெருங்காயம், தண்ணீர் ஆகியவற்றை ஒரு சட்டியில் போட்டு நன்றாக வேகவைக்கவும்.
- வெந்தபின் புளியை போட்டு மேலும் 5 நிமிடம் வேகவைக்கவும்.
- வெந்த கீரையை மத்தால் மையக் கடையவும்.
- பிறகு, ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், 4 பல் பூண்டு (தோலோடு நசுக்கியது) ஆகியவற்றை போட்டு தாலித்து கடைந்த கீரையில் கலந்து விடவும்.
அரைக்கீரை கடைசல் தயார் !!!
No comments:
Post a Comment