Thursday, 27 February 2014

பொன்மொழிகள் - 33

  1. புதிய உயிரை பாதுகாப்புடன் இந்த பூமியில் வாழச் செய்வது பெண் இனம் என்பதை மறுப்பதற்கு இல்லை.
  2. கரு பிடித்து கருவுக்குள் பாதுகாத்து அதன் வளர்ச்சிக்கு ஏதுவாக செயல் பட்டு குழந்தை ஈன்று அதற்கு தேவையான உணவை தந்து வளர்ப்பாள் தாய் என்ற பெண்.
  3. பசி ஏற்படாமல் உணவு உண்பதால் நோய் ஏற்படுகிறது இதற்கு மருந்தே உணவு பசித்த பிறகு உண்பதே சிறந்த முறையாகும்.
  4. சிந்தனை என்பது மனதில் எழும் எண்ணங்களின் கூட்டத்தை ஒழுங்கு படுத்தி தனக்குள் கேள்வியும் பதிலும் எப்படி செய்யல்லாம் என்ற கேள்வியும். இப்படி செய்யல்லாம் என்ற பதிலும் பெருவதற்கான எண்ணங்களின் தொகுப்பே சிந்தனை.
  5. காலத்திற்கும் வசதிக்கும் ஏற்ப தண்ணீர் பாத்திரங்கள் மாறுபடுகின்றன.
  6. சந்தோசம் நாம் மற்றவர்களுக்கு கொடுத்தால்தான் நமக்கு திரும்ப கிடைக்கும்.
  7. சொல்வதை விட செய்து காட்டவேண்டும். கடமையை செய்வதில் மனநிறைவு பெறுவதே உண்மையான வழிபாடாகும்.

Monday, 24 February 2014

பொன்மொழிகள் - 32

  1. நீ சிறந்தவனாய் திகழ விரும்பினால் தன்னடக்கமும், பணிவும் கொண்டவனாய் இரு.
  2. மேன்மையான எண்ணங்களுடன் இருப்பவர்கள் எப்போதும் தனித்திருப்பார்கள்.
  3. அடுத்தவருக்கு அறிவுரை கூருவதை விட கேட்பதே நல்லது.
  4. வழி தவறுவதை விட வழி கேட்பது மேல்.
  5. தன்னை காப்பாற்றிக் கொள்ளும் சக்தி இல்லை என்றால் மற்றவர்களால் அவர்களுக்குத் தீங்கு தான் நடக்கும். நம்மை துன்பப் படுத்துபவர்களிடம் பணிந்து போகாமல் துணிந்து நிற்கவேண்டும்.
  6. குறுகிய வாழ்க்கை முறையில் காலத்தை வீண் ஆக்காதே.
  7. ஒரு புன்சிரிப்பும் இதயத் தூய்மையும் உண்மையான அழகு.
  8. ஒருவனுக்கு நல்ல புத்தகமே என்றும் மாறாத நண்பனுக்கு சமம்.
  9. முன் எச்சரிக்கையோடு செயல்படுபவர்கள் என்றும் துன்பத்தில் சிக்க மாட்டார்கள்.
  10. பெண் என்பது எல்லா உயிர்களுக்கும் ஆரம்பமாக இருக்கிறது. பெண் இனத்திலிருந்து தான் பெரும்பகுதி பூமியில் தோற்றம் அடைகிறது.

Wednesday, 12 February 2014

பொன்மொழிகள் - 31

  1. சாதிக்க முடியாதவை என்பது பெரும்பாலும் முயற்சி செய்யாதவையாகவே இருக்கும்.
  2. நன்மை செய்வதற்குத் தயங்கக் கூடாது.
  3. கர்வத்திற்கு இடம் தரக் கூடாது.
  4. தீய எண்ணத்தின் மூலமோ கொடுஞ்சொற்கள் மூலமோ பிறருக்கு தீங்கு இழைக்கக் கூடாது.
  5. ஒருவன் துஷ்டன் என்பது நன்றாக தெரியுமானால் அவனுடன் பழகக் கூடாது.
  6. பிறருடைய பொருளை அபகரிக்கக் கூடாது.
  7. பிறரைத் திருப்தி செய்வதற்காகக் கூட பொய் சொல்லக் கூடாது.
  8. வீண் சண்டைக்குப் போகக் கூடாது.
  9. பிறருடைய குறைகளை மிகைபடுத்தக் கூடாது.
  10. நம்மை இந்த உலகம் பாராட்ட வில்லையே என்று துக்கப்படக் கூடாது.