Monday, 24 February 2014

பொன்மொழிகள் - 32

  1. நீ சிறந்தவனாய் திகழ விரும்பினால் தன்னடக்கமும், பணிவும் கொண்டவனாய் இரு.
  2. மேன்மையான எண்ணங்களுடன் இருப்பவர்கள் எப்போதும் தனித்திருப்பார்கள்.
  3. அடுத்தவருக்கு அறிவுரை கூருவதை விட கேட்பதே நல்லது.
  4. வழி தவறுவதை விட வழி கேட்பது மேல்.
  5. தன்னை காப்பாற்றிக் கொள்ளும் சக்தி இல்லை என்றால் மற்றவர்களால் அவர்களுக்குத் தீங்கு தான் நடக்கும். நம்மை துன்பப் படுத்துபவர்களிடம் பணிந்து போகாமல் துணிந்து நிற்கவேண்டும்.
  6. குறுகிய வாழ்க்கை முறையில் காலத்தை வீண் ஆக்காதே.
  7. ஒரு புன்சிரிப்பும் இதயத் தூய்மையும் உண்மையான அழகு.
  8. ஒருவனுக்கு நல்ல புத்தகமே என்றும் மாறாத நண்பனுக்கு சமம்.
  9. முன் எச்சரிக்கையோடு செயல்படுபவர்கள் என்றும் துன்பத்தில் சிக்க மாட்டார்கள்.
  10. பெண் என்பது எல்லா உயிர்களுக்கும் ஆரம்பமாக இருக்கிறது. பெண் இனத்திலிருந்து தான் பெரும்பகுதி பூமியில் தோற்றம் அடைகிறது.

No comments:

Post a Comment