Tuesday, 11 June 2013

பொன்மொழிகள் - 14

  1. நம்முடைய பாதுகாப்பையே எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தால் வாழ்வில் எதையுமே நாம் சாதிக்க முடியாது.
  2. உணர்ச்சிகளைக் கையாளும் போதும் அதிகபட்ச மகிழ்ச்சியானாலும் அதிகபட்ச துக்கமானாலும் இயல்பாய் அதை ஏற்றுக்கொள்ளுங்கள்.
  3. நீங்கள் செய்யும் வேலைகளில் திட்டமிடல், ஒழுங்கு, முழுமையான அறிவு, முழுமையான ஈடுபாடு, சொன்ன நேரத்தில் சொன்ன தொகைக்குல்லாகவே முடித்தல் போன்றவை நீங்கள் அபாரமாகவளர வழி வகுக்கும்.
  4. அடுத்தவரின் மன உணர்வுகளை அவர்கள் சொல்லாமலே புரிந்து கொண்டு நடப்பவர்களைத் தான் இங்கிதம் தெரிந்தவர்கள் என்று கூறுவார்கள் அனைவருக்குமே பிடிக்கும்.
  5. பாராட்டும் போது அனைவரின் முன்னிலையிலும் பாராட்டுங்கள். குறைக்கூறும் போது தனியாக அழைத்துக் குறைகளை எடுத்துக் கூறுங்கள்.
  6. இரக்கம் இல்லாத அதிகாரம் என்றுமே நிலைப்பதில்லை.
  7. நம்முடைய உணர்ச்சிகளையும், நம்முடைய அந்தரங்க விழயங்களையும் அதிகம் வெளிப்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  8. தகவல் தொழில்நுட்பம் துறையில் அறிவு நமக்கு இருக்குமானால் வெற்றியை அடிய நாம் இப்பொழுது உழைக்கும் உழைப்பில் பாதி உழைத்தாலே போதுமானது.
  9. கல்லாமை ஒழிந்தால் தான் இல்லாமை ஒழிந்து போகும்.
  10. வெறும் வாய்ச்சொல் மட்டும் இல்லாமல் அதை தனது செயலாகவும் செய்து தன்னை முன்னிறுத்திக் காட்ட வேண்டும்.

Friday, 7 June 2013

பொன்மொழிகள் - 13

  1. பொருமையானவர்களையும் சகிப்புத்தன்மை உடையவர்களையும் அனைவருமே விரும்புவார்கள்.
  2. இருப்பதிலேயே கடினமான ஒரு விஷயம் நம்பிக்கைக் குரியவராக இருந்து விட்டால் வெற்றிகள் நமமைத் தேடி வந்து குவிய ஆரம்பித்து விடும்.
  3. மனிதராகப் பிறந்த அனைவருமே வாழ்வில் சில நெறிமுறைகளைப் பின்பற்றியே வாழ்கிறார்கள் அவர்கள் பின்பற்றும் அந்த நெறிகளை வைத்தே அவர்கள் மதிப்பிடப்படுகிறார்கள்.
  4. நேரத்தை நாம் நிர்வாகிக்க முடியாது நம்மைத்தான் நாம் நிர்வகித்துக் கொள்ள வேண்டும் அதனால் நேரத்தின் மீது பழி போடாதீர்கள்.
  5. யோசித்துச் செயல்படுபவர்கள் அதிக தோல்விகளையோஅதிக ஏமாற்றங்களையோ சந்திப்பதில்லை.
  6. சாதனையாளர்கள் வரிசையில் வரவேண்டும் என்றல் செயல்முறை அழகோடு விளக்குவதன் மூலம் வெற்றி கிடைக்கும்.
  7. வெற்றியை நேசிப்பவர்களையே அது வந்தடைகிறது.
  8. ஆடம்பரம் செய்பவர்கள் ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் எப்போதும் நீடித்து வாழ்வதில்லை.
  9. நம்மை முதலில் நாம் மதிக்க வேண்டும். பிறர் மதிக்குமாறு நடந்து கொள்ளவேண்டும்.
  10. சுயக்கட்டுப்பாடு தான் நம்மை விலங்குகளிடமிருந்து பிரித்து மனிதர்களாகக் காட்டுகின்றது.

Sunday, 2 June 2013

பொன்மொழிகள் - 12

  1. எப்போதுமே பிறருடைய இடத்தில் இருந்து யோசித்து பழகுங்கள் மிகச்சிறந்த வெற்றியாளராய் நீங்கள் வளம் வருவீர்கள்.
  2. நிதானம் இழந்து விட்டால் வாழ்வையே இழக்க வேண்டி வரும் ஆகையால் அந்த சமயம் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
  3. வாய்ப்புகள் பெரிதோ சிறிதோ உங்களுக்குக் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் ஏனென்றால் சிறிய புழு தன பெரிய மீனைப் பிடிக்க உதவுகிறது.
  4. சாதனையாளர்கள் எப்போதுமே பேசுவது குறைவு செய்வது அதிகம்.
  5. சிறந்த ஆளுமை கொண்டவர்கள் தான் சார்ந்த அத்தனை விஷயத்திலும் கவனம் எடுத்துக் கொள்கிறார்கள் இதில் தோற்றம் இரண்டாம் பட்சம் தான்.
  6. இணையம் உலகிலுள்ள தகவல்களை ஒரு நொடியில் நம் கண்முன்னே கொண்டு வருகிறது கணிப்பொறி அறிவு அவசியமானது. இன்று உலக மக்கள் அனைவரையும் இணைக்கும் ஒரு பாலமாக இருப்பது இணையம் தான்.
  7. வியாபாரத்தில் ஒருவரை லாபம் பெற விடாமல் செய்தால் தான் இன்னொருவருக்கு லாபம் கிடைக்கும்.
  8. நாமும் வெற்றியடைந்து பிறரையும் வெற்றி அடைய செய்வதன் மூலமே நாம் தொடர்ச்சியான வெற்றியை அனுபவிக்க முடியும்.
  9. ஆயிரம் மடங்கு வசதிகளுடனும் செல்வத்துடனும் வாழப்பிறந்தவன் என்ற எண்ணம் எந்த சமயத்திலும் இருக்க வேண்டும்.
  10. ஒரு தொழிலை ஆரம்பித்தாலும் முதலீடு செய்வதாக இருந்தாலும் எதிர்கால நோக்கில் அதை அலசி ஆராய்ந்த பிறகே முதலீடு செய்ய வேண்டும்.