Friday, 7 June 2013

பொன்மொழிகள் - 13

  1. பொருமையானவர்களையும் சகிப்புத்தன்மை உடையவர்களையும் அனைவருமே விரும்புவார்கள்.
  2. இருப்பதிலேயே கடினமான ஒரு விஷயம் நம்பிக்கைக் குரியவராக இருந்து விட்டால் வெற்றிகள் நமமைத் தேடி வந்து குவிய ஆரம்பித்து விடும்.
  3. மனிதராகப் பிறந்த அனைவருமே வாழ்வில் சில நெறிமுறைகளைப் பின்பற்றியே வாழ்கிறார்கள் அவர்கள் பின்பற்றும் அந்த நெறிகளை வைத்தே அவர்கள் மதிப்பிடப்படுகிறார்கள்.
  4. நேரத்தை நாம் நிர்வாகிக்க முடியாது நம்மைத்தான் நாம் நிர்வகித்துக் கொள்ள வேண்டும் அதனால் நேரத்தின் மீது பழி போடாதீர்கள்.
  5. யோசித்துச் செயல்படுபவர்கள் அதிக தோல்விகளையோஅதிக ஏமாற்றங்களையோ சந்திப்பதில்லை.
  6. சாதனையாளர்கள் வரிசையில் வரவேண்டும் என்றல் செயல்முறை அழகோடு விளக்குவதன் மூலம் வெற்றி கிடைக்கும்.
  7. வெற்றியை நேசிப்பவர்களையே அது வந்தடைகிறது.
  8. ஆடம்பரம் செய்பவர்கள் ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் எப்போதும் நீடித்து வாழ்வதில்லை.
  9. நம்மை முதலில் நாம் மதிக்க வேண்டும். பிறர் மதிக்குமாறு நடந்து கொள்ளவேண்டும்.
  10. சுயக்கட்டுப்பாடு தான் நம்மை விலங்குகளிடமிருந்து பிரித்து மனிதர்களாகக் காட்டுகின்றது.

No comments:

Post a Comment