Tuesday, 11 June 2013

பொன்மொழிகள் - 14

  1. நம்முடைய பாதுகாப்பையே எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தால் வாழ்வில் எதையுமே நாம் சாதிக்க முடியாது.
  2. உணர்ச்சிகளைக் கையாளும் போதும் அதிகபட்ச மகிழ்ச்சியானாலும் அதிகபட்ச துக்கமானாலும் இயல்பாய் அதை ஏற்றுக்கொள்ளுங்கள்.
  3. நீங்கள் செய்யும் வேலைகளில் திட்டமிடல், ஒழுங்கு, முழுமையான அறிவு, முழுமையான ஈடுபாடு, சொன்ன நேரத்தில் சொன்ன தொகைக்குல்லாகவே முடித்தல் போன்றவை நீங்கள் அபாரமாகவளர வழி வகுக்கும்.
  4. அடுத்தவரின் மன உணர்வுகளை அவர்கள் சொல்லாமலே புரிந்து கொண்டு நடப்பவர்களைத் தான் இங்கிதம் தெரிந்தவர்கள் என்று கூறுவார்கள் அனைவருக்குமே பிடிக்கும்.
  5. பாராட்டும் போது அனைவரின் முன்னிலையிலும் பாராட்டுங்கள். குறைக்கூறும் போது தனியாக அழைத்துக் குறைகளை எடுத்துக் கூறுங்கள்.
  6. இரக்கம் இல்லாத அதிகாரம் என்றுமே நிலைப்பதில்லை.
  7. நம்முடைய உணர்ச்சிகளையும், நம்முடைய அந்தரங்க விழயங்களையும் அதிகம் வெளிப்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  8. தகவல் தொழில்நுட்பம் துறையில் அறிவு நமக்கு இருக்குமானால் வெற்றியை அடிய நாம் இப்பொழுது உழைக்கும் உழைப்பில் பாதி உழைத்தாலே போதுமானது.
  9. கல்லாமை ஒழிந்தால் தான் இல்லாமை ஒழிந்து போகும்.
  10. வெறும் வாய்ச்சொல் மட்டும் இல்லாமல் அதை தனது செயலாகவும் செய்து தன்னை முன்னிறுத்திக் காட்ட வேண்டும்.

No comments:

Post a Comment