Friday, 31 May 2013

பொன்மொழிகள் - 11

  1. அவசியம் இல்லாத விஷயங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குவதை அதிக முக்கியத்துவம் தருவதைத் தவிர்க்கவும்.
  2. சமயம், சந்தர்ப்பம் ஏற்றவாறு ஒத்துப் போகும் தன்மை உள்ளவர்களாலேயே மிகப்பெரிய வெற்றிகள் கிடைக்கும்.
  3. பிறரை பாராட்டுவதற்கு நமக்கு மனமிருந்தால் போதும் பணம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
  4. திறமையை வெளிப்படுத்துவது என்பது வருந்தத் தக்க ஒன்றோ வெட்கப்படத்தக்க ஒன்றோ கிடையாது. அந்த நேரம் தைரியம் மனோபலம் உங்களிடம் இருக்க வேண்டும்.
  5. ஒரு துறையில் கைதேர்ந்தவர்களாக இருப்பது பல சமயங்களில் உங்கள் வாழ்க்கையை உயர்த்தும்.
  6. அவசியம் ஏற்படும்போது அணுகுமுறை தெரியாமல் பலர் தோல்வியடைவதை நாம் கண்முன் பலமுறை பார்த்திருப்போம்.
  7. உங்கள் அறிவல்ல, உங்கள் மனநிலையே உங்களின் உயர்வை தீர்மானம் செய்கிறது.
  8. தன்னை, பிறரை, சமுதாயம் பற்றிய விழிப்புணர்வு இல்லாவிட்டால் நாம் சமுதாய ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு விடுவோம்.
  9. நமக்கு சௌகர்யமில்லாத, சங்கடப்படுத்தப் போகும் ஒரு செயலை சந்திப்பதே பிரச்சினை எனப்படுகிறது.
  10. அனைத்து இடங்களிலும் உறவுகளையும், நட்புகளையும் பார்க்காமல் உண்மைகளின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கலாம்.

Monday, 27 May 2013

பொன்மொழிகள் - 10

  1. ஒருவன் சொத்தை சூரையாடுகிறான் பதிலுக்கு அவன் இவன் சொத்தை சூறையாடுகிறான் இந்த சூறையாடல் சக்கரம் தொடரும் யாராவது இதை நிறுத்தினால்தான் முடிவுக்கு வரும்.
  2. நம்ம சமைத்த்ப் சமயலை ஒரு தடவை சுவைத்து பார்பது போல் நம் வாயால் சொல்கின்ற வார்த்தைகளை ஒரு முறை சொல்லி பார்த்து பிறகு நல்லது கெட்டது எது என்று யோசித்து பின் சொன்னால் பல பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
  3. நன்றி என்பது சரியான காலம் வரும் போது அதனை திருப்பி  செய்வது நம்மை ஒரு முழுமையான மனிதனாகக் காட்டும்.
  4. வெற்றி என்பது கடின உழைப்பும், பண்பும், தியாகமும் சுயக்கட்டுப்பாடும் அவசியமாகும்.
  5. எப்போது உங்களின் விருப்பமும் வேலையும் ஒன்றாக ஆகின்றதே அப்போது நீங்கள் சாதிப்பீர்கள்.
  6. உடல் என்பது நமது சொத்து நமது மூலதானம். உடல் நன்றாக இருந்தால் தான் மனம் நன்றாக இருக்கும்.
  7. பிறரால் உங்களைக் காப்பி அடிக்க முடியுமே தவிர உங்களின் தனித்தன்மையை என்றுமே தடுக்க முடியாது.
  8. புதுமையாய் யோசியுங்கள் மக்கள் மத்தியில் எப்போதுமே இந்த புதுமைக்கு வரவேற்பு அதிகம்.
  9. சரியான தூண்டுதல் மட்டும் கிடைத்து விட்டால் மலையளவு வேலை கூட நொடிப்பொழுதில் முடிந்துவிடும்.
  10. எந்த செயலுக்கும் வழிமுறை என்பது மிக முக்கியம்.

Sunday, 19 May 2013

உணவே மருந்து - 5

  1. வயிற்ருப்புண், ஒவ்வாமை உள்ளவர்கள் பலகாரம் செய்த எண்ணெயை திரும்பத்திரும்ப பயன்படுத்துவதால் உடம்பில் நோய் அதிகரிக்கும், உடம்புக்கு ஆகாது.
  2. வெய்யில் காலத்தில் இளநீர், தர்பூசணி வெள்ளரிக்காய், நொங்கு, எலுமிச்சம் பழம், நெல்லிக்காய், பச்சை வாழைப்பழம் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது.
  3. பாதத்தில் வெடிப்பு உள்ளவர்கள் நகம் சொத்தை உள்ளவர்கள் இரவு தூங்கும்போது தினமும் எண்ணெய் தடவி வந்தால் சரி ஆகும்.
  4. இரவில் தூங்கும் போது ஒரு சொட்டு வேப்பெண்ணை உடம்பில் தடவினால் கொசு கடிக்காது.
  5. ஆலிவ் எண்ணெயை தூங்கும் போது உதட்டில் தடவினால், உதடு மிருதுவாக இருக்கும்.
  6. வாய் நாற்றம் உள்ளவர்கள் தினமும் நெல்லிக்காய் சாபிட்டால் சரி ஆகும்.
  7. அஜீர்ணக் கோளாறு உள்ளவர்கள் இடது பக்கம் உள்ள பற்களால்  மென்று சாப்பிட்டால் சரி ஆகும்.
  8. பற்களால் மென்று சாப்பிட முடியாதவர்கள் சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் மட்டும் இடது பக்கமாக திரும்பி படுத்தால் அஜீரணக் கோளாறு சரி ஆகும்.
  9. கால் விக்கம் உள்ளவர்கள் பார்லி அரிசியை லேசாக வறுத்து பொடி செய்து ஒரு கைப்பிடி அளவு வேகவைத்து பாயசம் போல் குடித்தால் சரி ஆகும்.
  10. பாதத்தில் வலி உள்ளவர்கள் வலி இருந்தால் மட்டும் ஒரு சிறிய ஸ்பூன் அளவு கசகசாவை இரவில் சாப்பிட்டால் கட்டுப்படும்.