Tuesday, 30 April 2013

பொன்மொழிகள் - 4

  1. உங்கள் மொத்த மதிப்பு எவ்வளவு என்றோ, எவ்வளவு சம்பதிக்கிரிர்கள் என்றோ யாரிடமும் சொல்லதீர்கள் எப்போதுமே; சொன்னால் குறைவாக இருப்பதர்க்காக  சிலரும், அதிமாக இருப்பதர்க்கா பலரும் உங்களை வெறுக்கலாம்.
  2. பசுவுக்கு தழை தருவதும் பசியோடு வருபவர்க்கு ஒருபிடி சோறு தருவதும் இனிய சொற்கள் மூலம் பிறரை மகிழ்விப்பதும்கூட வழிபாட்டு முறைகள்தாம்.
  3. அடக்கம் உள்ளவர்கள் வானத்திலிருக்கும் தேவர்களுக்கு சமம் வாழ்கையில் உயர்ந்துக்கொண்டே போவார்கள்.
  4. விதைகளைச் சமைத்து உண்பவன் மூடன்.  அதை விதைத்து விளைச்சல் பயனை அனுபவிப்பவனே அறிவாளி.
  5. அன்பு, கருணை, கொடை, வாய்மை போன்ற நல்ல குணங்களெல்லாம் இல்லறத்தின் வழியேதான் வெளிப்படுத்த முடியும்.
  6. ஆபத்து நேரும் காலத்தில் தனது ஐந்து உறுப்புகளையும் ஓட்டுக்குள் இழுத்துக்கொண்டு பாதுகாத்துக்கொள்கிறது ஆமை.  அதைப்போல மனிதன் தன ஐம் புலன்களையும் அடக்கி ஆள வேண்டும்.
  7. ஏக்கம், ஏமாற்றம், அதைரியம், அச்சம், கர்வம், கோபம் இவை எதுவுமே மாணவர்கள் அகராதியில் இருக்கக்கூடாது.
  8. சந்தேகம் கேட்டு, அதை நிவர்த்தி செய்துக்கொண்டு பாடம் பயில்கிற மாணவர்கள்தான் சாதிக்கிறார்கள்.
  9. உடல் எவ்வளவு அழகானதாக இருந்தாலும் அது அசுத்தங்கள் நிரம்பியதே.
  10. பல சமயங்களில் தீயோர் நல்லவர் போலவே தோன்றுவர்.  அதை ஆய்ந்தறிவது கடினம்.

No comments:

Post a Comment