Tuesday, 13 August 2013

பொன்மொழிகள் - 23

  1. நம் வீட்டு விஷயங்களை நமக்கு உள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டும். கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனைகளை அவர்களே பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். இப்படி இருந்தாலே வாழ்வு இனிமையாகிவிடும்.
  2. தேச பக்தர்கள் பலரை பற்றி தெரிந்து கொள்ள "தேச விடுதலையும் தியாகச் சுடர்களும்" என்ற புத்தகத்தை படித்துத் தெரிந்து கொள்ளலாம். இது மாணவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.
  3. தோப்புக்கர்ணத்துக்கும் தலையில் குட்டிக் கொள்வதற்கும் அக்குபிரசர் முறையில் சில மருத்துவ நலன்கள் உண்டு.
  4. நம் மனதை நேரத்துக்குத் தகுந்தாற்போல் வளைத்து எதிர்வரும் இன்னல்களைச் சமாளிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் மனம் ஒடிந்து விபரீதமான முடிவுகளை தேடிச் செல்லக் கூடாது.
  5. காலம் உயிர் போன்றது என்பதே உண்மை. உயிர் பிரிந்தால் எப்படி நமது உடலில் மீண்டும் சேராதோ அது போன்று காலத்தை இழந்தால் மீண்டும் அதை பெற இயலாது.
  6. பொருட்களை வாங்குவதற்கு எது அளிக்கப்படுகிறதோ அது எல்லோராலும் பணம் எனப்படும்.
  7. நாம் அறிய முடியாத காரணத்தைத்தான் ஊழ்வினை என்றும் முன்வினைப்பயன் என்றும் சொல்லபடுகிறது.
  8. எங்கு நாம் இருக்கிறோமோ அங்கு நாம் ஒரு காரணத்திற்காக வைக்கப்பட்டிருக்கிறோம்.
  9. இந்த உலகம் உயிருள்ளவர்களுக்கே சொந்தம். உயிர் உள்ளவர்கள் இந்த உலகை வெல்ல ஆசை பட வேண்டும்.
  10. வாழ்க்கையை வெறுப்பவர்கள் இறந்து போனவர்களுக்கு சமம் எனவே வாழ்க்கையை நேசிக்க வேண்டும்.

No comments:

Post a Comment