தேவையான பொருட்கள்:
- சுண்டைக்காய் - 200 கிராம்
- வெங்காயம் - 200 கிராம்
- தக்காளி - 200 கிராம்
- பூண்டு - 10 பற்கள்
- சாம்பார் மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
- புளி - ஒரு சிறு எலுமிச்சை அளவு
- வெல்லம் - ஒரு சிறு நெல்லிக்காய் அளவு
- எண்ணெய் - 100 கிராம்
- கடுகு - 1 ஸ்பூன்
- வெந்தயம் - 1 ஸ்பூன்
- கறிவேப்பில்லை - 2 கொத்து
- கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - ஒரு லிட்டர்
- பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்தபின் கடுகு, வெந்தயம், கறிவேப்பில்லை போட்டு பொறிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
- தக்காளியை பொடியாக நறுக்கி கையால் மசித்து வெங்காயம் வதங்கியவுடன் போடவும்.
- தக்காளி வதங்கிய பின் பூண்டை போடவும்.
- இரண்டாக நறுக்கிய சுண்டைக்காயை போட்டு சிறிது நிறம் மாறும் வரை வதக்கவும்.
- இப்பொழுது சாம்பார் மிளகாய் தூள் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பிறகு தண்ணிர் ஊற்றி கொத்தமல்லி, வெல்லம், தேவையான உப்பு ஆகியவற்றை போட்டு கலக்கவும்.
- மேலே எண்ணெய் தானாக மிதந்து வரும் அளவுக்கு கொதிக்க விடவும்.
சுண்டைக்காய் குழம்பு தயார் !!!
பின்குறிப்பு:
- சுண்டைக்காயை சமைப்பதற்கு முன் நிறம் மாறாமல் இருப்பதற்கு அதை இரண்டாக நறுக்கி தண்ணிரில் போட்டுவைக்கவும்.
- சாம்பார் மிளகாய் தூள்
- கொத்தமல்லி (தனியா) - 1 கிலோ
- நீட்டு மிளகாய் - 1/2 கிலோ
- குண்டு மிளகாய் - 1/2 கிலோ
- மஞ்சள் - 50 கிராம்
- கடுகு - 100 கிராம்
- மிளகு - 100 கிராம்
- சீரகம் -100 கிராம்
- வெந்தயம் - 25 கிராம்
- கடலை பருப்பு - 100 கிராம்
- சோயா பீன்ஸ் - 100 கிராம்
- புழுங்கல் அரிசி - 100 கிராம்
- கடலை பருப்பு, கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம், சோயா பீன்ஸ், புழுங்கல் அரிசி ஆகியவற்றை தனி தனியாக எண்ணெய் இல்லாமல் லேசாக வறுத்து பின் கொத்தமல்லி (தனியா), நீட்டு மிளகாய், குண்டு மிளகாய், மஞ்சள் இவற்ற்றோடு சேர்த்து மிசினில் அரைத்து கொள்ளவும்.
- மிளகாய் தூள் அரைத்ததும் சூடு ஆறும் வரை பாத்திரத்தை மூடாமல் திறந்து வைக்கவும். ஆறியபின் முடிவைத்துத் தேவையான பொழுது பயன்படுத்தவும்.
- நீட்டு மிளகாய், குண்டு மிளகாய் இரண்டும் கிடைக்காத பட்சத்தில் ஏதேனும் ஒரு வகை மிளகாயை ஒரு கிலோ பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment