Thursday, 1 August 2013

விநாயகர் சதுர்த்தி சிறப்பு சுலோகங்கள்

சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்
ப்ரஸந்த வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே.

***

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.

***

ஓம் ஏகதந்தாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.

***

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

***

மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே.

***

கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக்  கவலை தீருமே.

***

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

***

அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல
குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.

***

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலசார பக்ஷிதம்
உமாஸுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம். 

***

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா.

***

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்!
விநாயகனே வேட்கை தணிவிப்பான்! விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணில் பணிமின் கனிந்து.


***

சுக்லாம் பரதரம் விஷ்ணும்
சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோப சாந்தயே.

***

வக்ரதுண்டாய ஹீம்
ஓம் நமோ ஹேரம்ப மதமோதித
மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா
ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.

***

விநாயகர் அகவல்
சீதக் களபச் செந்தா மரைப்பூம் 
பாதச் சிலம்பு பலஇசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகி லாடையும் 
வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் 
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் 
வேழ முகமும் விளங்குசிந் தூரமும் 
அஞ்சு கரமும் அங்குச பாசமும் 
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் 
நான்ற வாயும் நாலிரு புயமும் 
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் 
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் 
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் 
சொற்பதங் கடந்த துரிய மெய்ஞ்ஞான 
அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே!
முப்பழம் நுகரும் மூஷிக வாகன!
இப்பொழு(து) என்னை ஆட்கொள வேண்டித் 
தாயாய் எனக்குத் தானெழுந் தருளி 
மாயாப் பிறவி மயக்க அறுத்துத் 
திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப் 
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து 
குருவடி வாகிக் குவலயந் தன்னில் 
திருவடி வைத்துத் திறம்இது பொருளென 
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக் 
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே 
உவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில் 
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி 
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் 
இன்புறு கருணையில் இனிதெனக் கருளிக் 
கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து 
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து 
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி 
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே 
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால் 
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி 
ஆறா தாரத்து அங்கிசை நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே 
இடைபிங் கலையின் எழுத்திற வித்துக் 
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி 
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் 
குண்டலி யதனிற் கூடிய அசபை 
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து 
மூலா தாரத்து மூண்டெழு கனலைக் 
காலால் எழுப்புங் கருத்தறி வித்தே 
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் 
குமுத சகாயன் குணத்தையுங் கூறி 
இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையம் 
உடற் சக்கரத்தின் உறுப்பையுங் காட்டிச் 
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும் 
என்முகமாக இனிதெனக் கருளிப் 
புரியட்ட காயம் புலப்பட எனக்குத் 
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக் 
கருத்தினிற் கபால வாயில் காட்டி 
இருத்தி முத்தி இனிதெனக் கருளி 
என்னை அறிவித்து எனக்கருள் செய்து 
முன்னை வினையின் முதலைக் களைந்தே
வாக்கும் மனமும் இல்லா மனோலயம் 
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து 
இருள்வெளி இரண்டிற்கு ஒன்றிடம் என்ன 
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தி என் செவியில் 
எல்லை இல்லா ஆனந் தமளித்து 
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச் 
சத்தத்தி னுள்ளே சதாசிவம் காட்டிச் 
சித்தத்தி னுள்ளே சிவலிங்கம் காட்டி 
அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க் 
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி 
வேடமும் நீறும்  விளங்க நிறுத்திக் 
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி 
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை 
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் 
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட 
வித்தக! விநாயக! விரைகழல் சரணே!

No comments:

Post a Comment