தேவையான பொருட்கள்:
- பச்சை அரிசி மாவு - 1 கப்
- தேங்காய் துருவல் - 1கப்
- வெல்லம் - 1/2 கப்
- சர்க்கரை - 1/2 கப்
- ஏலக்காய் - 4
- நெய் - 1 ஸ்பூன்
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- தண்ணீர் - 1 கப்
- பாதாம், பிஸ்தா, முந்திரி - தேவைப்பட்டால்
- பால் - 1 கரண்டி
- அடுப்பில் பாத்திரத்தை வைத்து வெல்லம், சர்க்கரை, தேங்காய், ஏலக்காய், நெய், பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றை போட்டு கிளறி எடுத்து வைக்கவும்.
- பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர், ஒரு கரண்டி பால், ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொதிக்க வைத்து அரிசி மாவை போட்டு கிளறி எடுத்து வைக்கவும்.
- கிளறிவைத்த அரிசி மாவை நன்றாகக் கட்டி இல்லாமல் பிசைந்துக் கொள்ளவும்.
- இதனை சிறு உருண்டைகளாக உருட்டி உள்ளங்கையில் வைத்து தட்டையாக தட்டவும்.
- இதன்மேல் செய்துவைத்த பூரணத்தை சிறுது எடுத்து வைத்து மூடி உருண்டையாக பிடித்துக்கொள்ளவும்.
- இப்படி செய்துவைத்த கொழுக்கட்டை உருண்டைகளை ஒரு இட்லி பாத்திரத்தில் இட்லியை வேகவைப்பது போல் ஐந்து நிமிடம் வேகவைத்துக் கொள்ளவும்.
கொழுக்கட்டை தயார் !!!
பின்குறிப்பு:
- பச்சை அரிசியை ஒரு மணிநேரம் ஊர வைத்து பின் தண்ணிரை வடித்து ஒரு வெள்ளை துணியில் பரப்பி நிழலில் காய வைத்து அரைத்துக்கொள்ளவும்.
No comments:
Post a Comment