- நீ விருப்பப்பட்டு சாபிட்டால் இரும்பு கூட கரும்பு போல இனிக்கும். விருப்பம் இல்லாமல் சாப்பிட்டால் கரும்பு கூட கடினமாக இருக்கும்.
- சுத்தமான இடத்தைப் பார்த்தால் உட்கார தோணும் அதுபோல் தூய்மையான எண்ணம் உள்ளவர்களிடம் இறைவன் வந்து அமர்வான்.
- கெட்டவர்கள் நல்லவர்களுக்கு சாபம் விட்டால் அது பலிக்காது. மாறாக அது வரமாக மாறிவிடும்.
- பாலும், சுண்ணாம்பும் பார்வைக்கு ஒன்றுதான் ஆனால் குணத்தால் வெவ்வேறு தன்மை உடையது.
- தாயையும், தந்தையையும் கருவிகளாகக் கொண்டு விதியின் விளையாட்டு அனுபவத்தைப் பெறுவதற்குப் பூமியில் பிறக்கிறது குழந்தை.
- திடமான மனம் உடையவன் தன்னை இகழ்வதையும் புகழ்வதையும் ஒன்றாகக் கொண்டவன். மானத்திலும் அவமானத்திலும் சம பாவனை உடையவன்.
- மலர்களில் இருந்து மணத்தைக் காற்று எடுத்துச் செல்வது போல நாம் போகின்ற இடங்களிலும் குணங்களைக் கொண்டு செல்கிறோம்.
- தீய குணம் உள்ளவர்களிடம் காணப்படுவது டம்பம், இருமாப்பு, கர்வம், கடுமை தவறு செய்ய அஞ்சாதவர்கள்.
- தவம் என்பது சரீரத்தால் செய்யப்படுவது, வாக்கால் செய்யப்படுவது, ,மனதால் செய்யப்படுவது என மூன்று வகைப்படும்.
- தண்ணிரை கூட ஐஸ்கட்டியாக மாற்றி சல்லடையால் அல்லலாம். அது போல தோல்வியை கூட வெற்றியின் படியாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
Friday, 21 June 2013
பொன்மொழிகள் - 18
Labels:
பொன்மொழிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment