Wednesday, 26 June 2013

பொன்மொழிகள் - 20

  1. ஒவ்வொருவரும் தன் வயதிற்கேற்ப பலவிதமான புத்தகங்களை படிக்க வேண்டும். வாழ்க்கையில் புத்தகங்களை படிப்பதால் நாமே பல சமயம் பக்குவமாக முடிவுகளை எடுக்க உதவும்.
  2. மனிதவாழ்க்கையில் ஒவ்வொருவரும் திருமந்திரம் படித்தால் உறவுகளிடையே குழப்பம் இல்லாமல் பல விசயங்களை புரிந்துகொள்ளலாம்.
  3. என்னால் முடியாது என்ற எண்ணம் தான் நம் முதல் எதிரி.
  4. வாழ்க்கையில் நடைமுறையில் சில நல்ல மாறுதல்களை மாறுவதற்கு மறுப்பவர்கள் துன்பப்படுகிறார்கள்.
  5. முன்னேற்றம் என்பது முன்னோக்கிப் போய் கொண்டே இருப்பது. அது தேங்கிக் கிடப்பதில்லை, பூர்த்தி அடைவதில்லை, அதற்கு எல்லையும் கிடையாது. ஒதுங்கி நிற்பவர்கள் ஒதுக்கப்படுவார்கள்.
  6. தோல்வி என்பது ஒத்திப் போட்டுள்ள வெற்றி, வீழ்வதில் தவறில்லை. எழுந்திரிக்கும் எண்ணம் இல்லாமல் விழந்தே கிடப்பது தவறு.
  7. ஒருவன் பெற்றுள்ள உடற்பன்புகள், மனப்ன்புகள், சமுக அறநெறிகள், மனப்பான்மைகள் போன்ற எல்லா பான்புகலும் இணைந்த முழுமையான கலவை ஆளுமை எனப்பட்டும்.
  8. நாம் பேசுவதை விட நம் உடல் அதிகம் பேசுகிறது. உடல் எப்போதும் உண்மையையே பேசுகிறது என்பது தான் நிஜம்.
  9. நம்முடைய உணர்ச்சிகளை நம்முடைய உடல் மொழி மூலம் அடுத்தவர்கள் அதிகமாகப் புரிந்து கொள்ள இடம் தராமல் இருக்க வேண்டும்.
  10. நாம் அடுத்தவர்கள் உடல் மொழியை முடிந்தவரை புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொண்டால் நம் வெற்றி தோல்வியை நாமே எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment