Sunday, 23 June 2013

பொன்மொழிகள் - 19

  1. அடிக்கடி தோல்வியுருபவர்கள் தமது பழக்கத்தை மாற்றிக் கொள்ளாதவர்கள்.
  2. வாழ்க்கையின் தொடக்கத்திலேயே பழக்கத்தை, குணத்தை செயல்முறைகளை வித்தியாசமான அணுகுமுறைகளை நல்லவிதமாக மாற்றிக்கொண்டால் மட்டுமே வெற்றியை அடைய முடியும்.
  3. வெட்கப்படுவது, மற்றவர்களிடம் மனதில் உள்ளதை சொல்லத் தயங்குவதும் அதிர்ஷ்டத்தைத் தடுக்கும்.
  4. வாழ்க்கையில் சாதிமத வேறுபாடுகளைக் கருத்தில் கொண்டு எதையும் செய்யக்கூடாது. ஆக்கபூர்வமான திறமையை மட்டுமே பார்க்க வேண்டும்.
  5. வாடிக்கையாளர்கள் தலையில் தரம் இல்லாத எதையும் கட்ட முடியும் என்று நினைப்பவர்கள் தொழிலில், வர்த்தகத்தில், விற்பனையில் முன்னேற முடியாது.
  6. பலபேர்கள் போதிய அளவுக்கு கல்வி பெற முடியாமல் தொழில் மேதைகளாக, அரசியல் தலைவர்களாக விளங்கி இருக்கிறார்கள். படிக்கவில்லையே என்று வருந்தவேண்டாம்.
  7. எப்போதும் சிடுசிடு என்று இருப்பவர்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது பிரச்சனைகளை உண்டாக்கி விடுவார்கள்.
  8. பொது மக்களுடன் தொடர்பு கொள்பவர்கள் வாடிக்கையாளர்களை அடிக்கடி சந்திக்க வேண்டிய வேளைகளில் உள்ளவர்கள் எப்போதும் இனிமையாகவும், அமைதியாகவும், புன்சிரிப்புடன் காணப்பட வேண்டும்.
  9. பொதுவாக வெற்றி, தோல்வி என்பது மனித இனத்தின் விதியாகும்.
  10. மனித இனம் வெளிப்படுத்தும் அன்புதான் இந்த உலகத்தில் சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் திரும்பத்திரும்பக் கொண்டு வந்து சேர்க்கும்.

No comments:

Post a Comment