- மற்றவர்களுக்கு நல்லவராக இருக்கும் நீங்கள் உங்களுக்கே நல்லவராவீர்கள்.
- உனக்குள் இருக்கும் திறமை வெளிப்படும் வகையில் நீ வளர வேண்டும்.
- லாபத்தினால் ஒருவன் பணக்காரன் ஆவதில்லை செமிப்பதினால் தான்.
- அடுத்தவர் இதயத்தை வெல்ல ஒரே வழிதான் உண்டு. நீங்கள் பேசும் வார்த்தைகள் உதட்டிலிருந்து அல்ல உங்களின் இதயத்திலிருந்து வரட்டும்.
- நாம் பயணம் செய்யும் லட்சியப் பாதையில் சோர்ந்து நின்று விட்டால் நாமே மற்றவர்களுக்குத் தடை கல்லாக மாறிவிடுவோம்.
- ஆபத்து நேரத்தில் உதவாத மகன், பசிக்கு உதவாத உணவு, தாகத்துக்கு உதவாத நீர், வறுமை அறியாத மனைவி, கோபம் தணியாத மனிதன், குரு வார்த்தை கேளாதவன், பாவத்தைத் தீர்க்காத தீர்த்தம் இவை யாவும் இருந்தும் பயனில்லை.
- பெண்கள் செந்தாமரையில் வீற்றிருக்கும் இலட்சுமியை போல எப்போதும் அழகாகவும் தூய்மையாகவும் இருக்க வேண்டும்.
- கணவனும், மனைவியும் சேர்ந்து உண்மையான கடமையை செய்வதில் தான் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்த முடியும்.
- வாழ்க்கையில் எதையும் சிறியதாக நினைக்கக் கூடாது. எந்த வேலையையும் தாழ்ந்ததாக நினைக்கக்கூடாது.
- அதிக அளவு படித்தவர்கள் உயர் பதவியில் மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைக்க கூடாது. உங்களுக்குத் தோன்றிய யுக்தியை பயன்படுத்தி சுய தொழில் செய்து முன்னேரலாம்.
Sunday, 16 June 2013
பொன்மொழிகள் - 16
Labels:
பொன்மொழிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment