Friday, 14 June 2013

பொன்மொழிகள் -15

  1. நம் பெருமையை நாம் எல்லோரிடமும் சொல்லக்கூடாது. மற்றவர்கள் நம்மைப் பற்றி பெருமையாய் பேசும் அளவிற்கு சொல்லும் செயலும் இருக்க வேண்டும்.
  2. அதிகாரம் ஒரே இடத்தில் குவியக் கூடாது. அதை பரவலாக்கப்பட வேண்டும்.
  3. சொந்தக்காலில் நிற்கும் வல்லமை படைத்தவர்கள் வாழ்நாள் முழுவதும் மானத்தோடு நிம்மதியாக வாழ முடியும்.
  4. வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் அடைய விரும்புவர்கள் வாக்குத் தவராமலும் நேரம் தவராமலும் இருந்தால் தோல்வி உங்கள் பக்கமே எட்டிப் பார்க்காது.
  5. தண்ணீர் குடிப்பதில் கூட கவனமாகக் குடித்தால் தான் புரையேறாது.
  6. எப்போதுமே செய்கின்ற ஒவ்வொரு செயலும் உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.
  7. கணவன் மனைவி தூங்குப் போகும் நேரத்திலும், சாப்பிடும் சமயத்திலும் எந்த குறைகளையும் பேசக்கூடாது.
  8. அளவுக்கு மிஞ்சிய தூக்கம், அவசியமில்லாத பயம், ஆத்திரம், சோம்பல் எந்தகாரிய்த்தையும் தாமதமாக செய்யும் நடைமுறை உங்கள் முன்னேற்றத்தின் தடைகள்.
  9. நமக்கு பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்து ஒரு வினாடியைக் கூட வீணாக்க வேண்டாம்.
  10. மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் முயற்ச்சியில் நம் துயரத்தை மறப்போம்.

No comments:

Post a Comment