- திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது பெண்ணின் பிறந்த சாதகத்தை வைத்துதான் பொருத்தம் பார்க்க வேண்டுமே தவிற ருதுஜாதகத்தைக் கொண்டு பொருத்தம் பார்க்கக் கூடாது. சரியான நேரத்தை பார்க்க முடியாது.
- தீய மனிதர்களுடன் நல்ல மனிதர்கள் நட்பு கொண்டால் அந்த நல்ல மனிதர்களும் தீயவர்களாகிவிடுவார்கள். எனவே நண்பற்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் அவசியம்.
- ஒருவன் எதிலும் குறை கண்டால் அவன் வாழ்வில் நிறைவே காணமுடியாது.
- வின் பேச்சினாலும் வம்பு பேசிக் கொண்டிருந்தாலும் சச்சரவிட்டுக் கொண்டிருப்பதாலும் நம் சக்தி வீணாகிறது.
- பிறர் கேலி பேசுவதைக் கேட்டு ஒரு போதும் அச்சப்படக் கூடாது ஆனால் நீ செல்லும் வழி நேர் வழியாக இருக்க வேண்டும்.
- கோயில்களில் பலிபீடம், கொடிமரம் ஆகியவைகளுக்கு அருகே மட்டும் நமஸ்காரம் செய்ய வேண்டும். மற்ற இடங்களில் நமஸ்காரம் செய்யக் கூடாது.
- பொதுவாக கிழக்கு மேற்கு நோக்கிய கோயில்களில் வடக்கு பக்கம் பார்த்து நமஸ்காரம் செய்ய வேண்டும். வடக்கு தெற்கு நோக்கிய கோயில்களில் கிழக்கு பக்கம் பார்த்து நமஸ்காரம் செய்ய வேண்டும்.
- படிக்கும் பொழுது முதுகுத் தண்டு வளையக் கூடாது. நேராக நிமிர்ந்து உட்கார்ந்து படிக்க வேண்டும்.
- மறதியின் காரணம் எதையும் மேம்போக்காக செய்வதே பிறர் சொல்வதை சரியாகக் கேட்டுக் கொல்லாமை அலட்சியம் ஆகியவை மறதிக்குக் காரணங்கள்.
- குளிக்கும் பொழுது புண்ணிய நதிகளான கங்கா, யமுனா, சரஸ்வதி, கோதாவரி, சிந்து, காவேரி, நர்மத, வைகை, தாமிரபரணி ஆகியவற்றை மனதில் நினைத்துக் கொண்டு குளிக்கலாம்.
Friday, 20 September 2013
பொன்மொழிகள் - 26
Labels:
பொன்மொழிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment