Sunday, 8 September 2013

கேசரி

தேவையான பொருட்கள்:
  1. ரவை - 1 கப் 
  2. சர்க்கரை - 1 கப் 
  3. தண்ணீர் - 4 கப் 
  4. கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை 
  5. ஏலக்காய் - 4
  6. நெய் - 50 (அல்லது) 100 கிராம் 
  7. முந்திரி, பாதாம், திராட்ச்சை - தேவையான அளவு 

செய்முறை:
  1. ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி ரவையை போட்டு லேசாக வறுத்து எடுக்கவும்.
  2. மற்றொரு பத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன் சர்க்கரை, கேசரி பவுடர், ஏலக்காய் தூள் போடவும்.
  3. சர்க்கரை கரையும்வரை கொதிக்க விடவும்.
  4. இப்பொழுது ரவையை சிறிது சிறிதாக தூவி கிளறவும்.
  5. தண்ணிர்  வற்றியவுடன் இறக்கி வைக்கவும்.
  6. ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி முந்திரி, பாதாம், திராட்ச்சை போட்டு பொன் நிறம் ஆனதும் இந்த இறக்கி வைத்த கேசரியில் ஊற்றி கலந்து விடவும்.

கேசரி தயார் !!!


பின்குறிப்பு:
  • பாதாம், முந்திரியை சிறிய துண்டுகளாக்கிப் போடவும்.

No comments:

Post a Comment