தேவையான பொருட்கள்:
செய்முறை:
பின்குறிப்பு:
- ரவை - 1 கப்
- சர்க்கரை - 1 கப்
- தண்ணீர் - 4 கப்
- கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை
- ஏலக்காய் - 4
- நெய் - 50 (அல்லது) 100 கிராம்
- முந்திரி, பாதாம், திராட்ச்சை - தேவையான அளவு
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி ரவையை போட்டு லேசாக வறுத்து எடுக்கவும்.
- மற்றொரு பத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன் சர்க்கரை, கேசரி பவுடர், ஏலக்காய் தூள் போடவும்.
- சர்க்கரை கரையும்வரை கொதிக்க விடவும்.
- இப்பொழுது ரவையை சிறிது சிறிதாக தூவி கிளறவும்.
- தண்ணிர் வற்றியவுடன் இறக்கி வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி முந்திரி, பாதாம், திராட்ச்சை போட்டு பொன் நிறம் ஆனதும் இந்த இறக்கி வைத்த கேசரியில் ஊற்றி கலந்து விடவும்.
கேசரி தயார் !!!
பின்குறிப்பு:
- பாதாம், முந்திரியை சிறிய துண்டுகளாக்கிப் போடவும்.
No comments:
Post a Comment