Saturday, 7 September 2013

சர்க்கரை பொங்கல்

தேவையான பொருட்கள்:
  1. பச்சை அரிசி - 1 கப் 
  2. பச்சை பருப்பு - 1/2 கப் 
  3. பாகு வெல்லம் - 1/4 கிலோ 
  4. நெய் - 50 கிராம் 
  5. முந்திரி, திராட்ச்சை, பாதாம் - தேவையான அளவு 
  6. ஏலக்காய் - 4
  7. கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை 
  8. தண்ணீர் - 5 கப் 

செய்முறை:
  1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அரிசி, பருப்பு சேர்த்து நன்றாக  வேகவிடவும்.
  2. வெந்தவுடன் அனலை சிறிதாக்கி வெல்லத்தை தூள் செய்து போட்டு கரையும்வரை நன்றாகக் கிளறவும்.
  3. பின் கேசரி பவுடர், ஏலக்காய் தூள் போட்டு கலந்துவிடவும்.
  4. இப்பொழுது ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி முந்திரி, திராட்ச்சை போட்டு பொன் நிறம் ஆனதும் பொங்கலில் ஊற்றவும்.
  5. நன்றாகக் கலந்து பரிமாறவும்.
சர்க்கரை பொங்கல் தயார் !!! 

பின் குறிப்பு :
  • வெல்லத்தில் மண் தூசி இருந்தால் வெல்லபாகு செய்து உபயோகப்படுத்தலாம்.
  • வெல்லபாகு செய்முறை
    1. பாத்திரத்தில் ஒரு கரண்டி தண்ணீர் ஊற்றி போடி செய்த வெல்லத்தை போட்டு நன்றாகக் கரையும்வரை கொதிக்கவிடவும்.
    2.  பிறகு இதனை ஒரு வெள்ளை துணியால் வடிகட்டினால் வெல்லப்பாகு தயார்.

No comments:

Post a Comment