தேவையான பொருட்கள்:
செய்முறை:
- பச்சை அரிசி - 1 கப்
- பச்சை பருப்பு - 1/2 கப்
- பாகு வெல்லம் - 1/4 கிலோ
- நெய் - 50 கிராம்
- முந்திரி, திராட்ச்சை, பாதாம் - தேவையான அளவு
- ஏலக்காய் - 4
- கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை
- தண்ணீர் - 5 கப்
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அரிசி, பருப்பு சேர்த்து நன்றாக வேகவிடவும்.
- வெந்தவுடன் அனலை சிறிதாக்கி வெல்லத்தை தூள் செய்து போட்டு கரையும்வரை நன்றாகக் கிளறவும்.
- பின் கேசரி பவுடர், ஏலக்காய் தூள் போட்டு கலந்துவிடவும்.
- இப்பொழுது ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி முந்திரி, திராட்ச்சை போட்டு பொன் நிறம் ஆனதும் பொங்கலில் ஊற்றவும்.
- நன்றாகக் கலந்து பரிமாறவும்.
சர்க்கரை பொங்கல் தயார் !!!
பின் குறிப்பு :
- வெல்லத்தில் மண் தூசி இருந்தால் வெல்லபாகு செய்து உபயோகப்படுத்தலாம்.
- வெல்லபாகு செய்முறை
- பாத்திரத்தில் ஒரு கரண்டி தண்ணீர் ஊற்றி போடி செய்த வெல்லத்தை போட்டு நன்றாகக் கரையும்வரை கொதிக்கவிடவும்.
- பிறகு இதனை ஒரு வெள்ளை துணியால் வடிகட்டினால் வெல்லப்பாகு தயார்.
No comments:
Post a Comment